ஆதிதிராவிடர் பட்டியலின மக்களுக்கு குரல் கொடுத்த சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர், ஒருங்கிணைந்த சென்னை மாகாண சட்டப்பேரவை உறுப்பினர் திரு.இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 162வது பிறந்தநாள் இன்று. rettamalai srinivasan birthday
இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 162வது பிறந்தநாளை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “எல்லோருக்கும் சமமாக பட்டியல் இன மக்களும் வாழ்வதற்கான தீர்மானங்களைக்கொண்டு வந்தவருமான திரு.இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பணிகளை அன்னாரது 162வது பிறந்தநாளில் நினைவுகூர்ந்து வணங்குகிறேன். தமிழ்நாட்டில் அவர் முன்னெடுத்த சமூக சீர்திருத்தங்களைத் தொடர்ந்து மேற்கொள்ள இந்நாளில் உறுதி ஏற்போம்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அமமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அமமுக சார்பில், கழக துணைப் பொதுச் செயலாளர், சென்னை மண்டல பொறுப்பாளர் ஜி.செந்தமிழன், கழக ஆட்சி மன்ற குழுத்தலைவர் அரூர் ஆர்.ஆர்.முருகன், கழக கொள்கைப்பரப்பு செயலாளர் செல்வி சி ஆர் சரஸ்வதி, மண்டல செயலாளர் மற்றும் கழக பொறியாளர் அணி செயலாளர் செங்கல்கபட்டு வடக்கு மாவட்ட கழக செயலாளர் ம.கரிகாலன், இளம் பெண்கள் பாசறை செயலாளர் கிருஷ்ணா ராதா கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஏழுமலை, வேதாசலம் திருவள்ளூர் மத்திய மாவட்டக்கழக செயலாளர், மத்திய சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் வ.சுகுமார் பாபு, வடசென்னை மத்திய மாவட்ட கழக செயலாளர் எ.ஆர்.பழனி, வடசென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் பி.ஆனந்தன், மத்திய சென்னை மத்திய மாவட்ட கழக செயலாளர் ஹாஜி கே.முகமது சித்திக், பரணீஸ்வரன் தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் லக்கி முருகன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சங்கர் ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டு மரியாதை செலுத்தினர்.