• Home
  • அரசியல்
  • ஜெயலலிதாவை ஒருமையில் விமர்சித்த யாரும் வெற்றி பெற முடியாது: செல்லூர் ராஜூ
அரசியல் செய்திகள் தமிழ்நாடு

ஜெயலலிதாவை ஒருமையில் விமர்சித்த யாரும் வெற்றி பெற முடியாது: செல்லூர் ராஜூ

தேனி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை டெபாசிட் இழக்க செய்வோம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். 

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவை ஒருமையில் விமர்சித்த யாரும் வெற்றி பெற முடியாது என குறிப்பிட்டார். மேலும், ரவீந்திரநாத் குமார் மிகப்பெரிய வெற்றியை பெறுவார் என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத் குமார், தேனி உட்பட 40 தொகுதிகளில் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என குறிப்பிட்டார். 

18 ஆண்டுகளாக அதிமுகவில் களப்பணி ஆற்றி உள்ளதாக தெரிவித்த அவர், தேர்தல் காலத்திற்கு ஏற்ப கூட்டணி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஈவிகேஎஸ் இளங்கோவன், தன் தொகுதியில் போட்டியிடாமல் தேனியில் நிற்பதாக விமர்சித்த அவர், முல்லைப்பெரியாறு பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஈவிகேஎஸ்.இளங்கோவன் குரல் கொடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

Leave a Comment