திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி -க்கு இன்று கடிதம் எழுதியிருந்தார்.
Link: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்.
அந்த கடிதத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை, தமிழகத்திலும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இன்னும் வரவில்லை. பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது எனவும் விமர்சித்திருந்தார்.
ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி “கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பணிபுரியும் பல்வேறு துறை பணியாளர்களை கொச்சைப்படுத்துவதா?” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்
கொரோனா தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் இணையதளத்தில் ஒளிவுமறைவு இன்றி வெளியிடப்படுகிறது என்றும் தெரிவித்தார். மேலும் ஸ்டாலினுடைய இந்த குற்றச்சாட்டு, அவரது சந்தர்ப்பவாத அரசியலை காட்டுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார்.