• Home
  • அரசியல்
  • ‘சந்தர்ப்பவாதி ஸ்டாலின்’ – முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அரசியல் செய்திகள் தமிழ்நாடு

‘சந்தர்ப்பவாதி ஸ்டாலின்’ – முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Edappadi Palanisamy

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி -க்கு இன்று கடிதம் எழுதியிருந்தார்.

Link: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்.

அந்த கடிதத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை, தமிழகத்திலும்‌ முழுமையான கட்டுப்பாட்டுக்குள்‌ இன்னும்‌ வரவில்லை. பாதிப்புக்கு உள்ளாவோரின்‌ எண்ணிக்கை ஒவ்வொரு நாளும்‌ அதிகரித்து வருகிறது எனவும் விமர்சித்திருந்தார்.

ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி “கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பணிபுரியும் பல்வேறு துறை பணியாளர்களை கொச்சைப்படுத்துவதா?” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்

கொரோனா தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் இணையதளத்தில் ஒளிவுமறைவு இன்றி வெளியிடப்படுகிறது என்றும் தெரிவித்தார். மேலும் ஸ்டாலினுடைய இந்த குற்றச்சாட்டு, அவரது சந்தர்ப்பவாத அரசியலை காட்டுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார்.

Related posts

திருப்பூர் வாசிகள் இனி வீட்டில் இருந்தபடியே இ-பாஸ் வாங்கலாம்

Admin

அரசின் உத்தரவுகளை பின்பற்றுங்கள்: தப்லிகி ஜமாத் தலைவர் வேண்டுகோள்

Admin

திருநெல்வேலி : கொரோனா தடுப்பு நடவடிக்கை – வீட்டில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்

Admin

Leave a Comment