கணையப் புற்றுநோயால் அவதிப்பட்டுவந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் இன்று காலமானார்!
கோவா முதல்வராக இருந்து வந்த மனோகர் பாரிக்கர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கணைய புற்றுநோய் காரணமாக கோவா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மும்பை, டெல்லி நகரங்களில் சிகிச்சை பெற்று வந்த மனோகர் பாரிக்கர் சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில், மனோகர் பாரிக்கரின் உடல் நிலை கடந்த சில நாட்களாக மிகவும் மோசமடைந்துவிட்டதாக கோவா மாநில முதல்வர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. .
தற்போது, கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார் என்று குடியரசு தலைவர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.