• Home
  • அரசியல்
  • ‘சந்தர்ப்பவாதி ஸ்டாலின்’ – முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அரசியல் செய்திகள் தமிழ்நாடு

‘சந்தர்ப்பவாதி ஸ்டாலின்’ – முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Edappadi Palanisamy

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி -க்கு இன்று கடிதம் எழுதியிருந்தார்.

Link: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்.

அந்த கடிதத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை, தமிழகத்திலும்‌ முழுமையான கட்டுப்பாட்டுக்குள்‌ இன்னும்‌ வரவில்லை. பாதிப்புக்கு உள்ளாவோரின்‌ எண்ணிக்கை ஒவ்வொரு நாளும்‌ அதிகரித்து வருகிறது எனவும் விமர்சித்திருந்தார்.

ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி “கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பணிபுரியும் பல்வேறு துறை பணியாளர்களை கொச்சைப்படுத்துவதா?” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்

கொரோனா தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் இணையதளத்தில் ஒளிவுமறைவு இன்றி வெளியிடப்படுகிறது என்றும் தெரிவித்தார். மேலும் ஸ்டாலினுடைய இந்த குற்றச்சாட்டு, அவரது சந்தர்ப்பவாத அரசியலை காட்டுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார்.

Related posts

Toll Gate கட்டணம் வசூலிக்க கூடாது..துப்புரவு பணியாளர்களுக்கு கவச உடை – TTV தினகரன் அறிக்கை

Admin

எம்ஜிஆர் என் தலைவர்.. கருணாநிதி தலைமையில் கல்யாணம்.. ஜெயலலிதாவுக்காக குரல் கொடுத்த ரஜினிகாந்த் | மனம் திறக்கும் சசிகலா

Admin

வெளிமாநிலங்களுக்கு ஆக்ஸிஜனை அனுப்பும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது – TTV தினகரன்

Admin

Leave a Comment