கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழகம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை தமிழகத்தில் 144 தடையை அமல்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்த தடை உத்தரவால் நாளை மாலை 6 மணி முதல் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும்.
- அரசு மற்றும் தனியார் பேருந்துகள், வாடகை கார்கள், ஆட்டோ ஆகியவை இயங்காது.
- அத்தியாவசிய பொருட்டுக்களான பால் மற்றும் காய்கறிகள் மளிகை தவிர மற்ற எந்த கடைகளும் இயங்காது.
- மக்களின் சேவைக்காக மருத்துவமனைகள், மருந்தகங்கள் இயங்கும்
- தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் நாளை முதல் இயங்காது
- விடுதிகளில் தங்கியிருப்பவர்கள் வசதிக்காக அம்மா உணவகங்கள்
- செயல்படும்.
- கர்ப்பிணிகள், முதியவர்கள் கண்டறிந்து உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- சாலையோரம் வசிக்கும் மக்களின் நிலை பற்றி முதல்வர் அறிக்கையில் எதுவும் கூறவில்லை.
மேலும் 144 தடை உத்தரவு குறித்த விரிவான அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும்.