இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிரிப்பு வார்டுகள் அமைத்து மருத்துவர்களும் செவிலியர்களும், மருத்துவமனை ஊழியர்களும் கொரோனா பதித்த நோயாளிகளை சிறப்பான முறையில் பாதுகாத்து அவர்கள் பூரண குணமடைய உழைத்து வருகின்றனர்.
இவர்கள் உழைப்பாலும் தன் தன்னம்பிக்கையாலும் கொரோனாவை வென்றுள்ளார் சென்னையை சேர்ந்த 83 வயது முதியவர்.
கொரோனா அறிகுறியுடன் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்த முதியவர், இவர் மருமகன் மற்றும் மேலும் இருவர் இன்று (15.04.2020) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.