கொரோனா என்ற வைரசால் இதுவரை 13,069 பேர் உலகம் முழுவதும் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் இந்த வைரசால் இதுவரை 324 பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் 5 பேர் மரணமடைந்துள்ளனர், 24 பேர் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் மேலும் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு கட்டமாக இன்று (மார்ச் 22 2020) ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் அனைவரும் வீட்டிலியே இருக்கும்படியும் வெளியில் வர வேண்டாம் என்றும் அரசு அறிவித்திருக்கிறது. Janata Curfew ( சுய ஊரடங்கு உத்தரவு ) என்ற பெயரில் இந்த அறிவிப்பை மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த அறிவிப்பு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டிருக்கிறது, தெலுங்கானா மாநிலத்தில் அரசின் அறிவிப்பை மீறி வெளியில் வந்த பொதுமக்களிடம் தெலுங்கானா காவல்துறையினர் கை எடுத்து கும்பிட்டு கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.