சென்னை: பாஜகவுக்கு ஆதரவு அளிக்க மாட்டேன் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
பாஜகவுக்கு ஆதரவு அளிப்பேனா என்று கேட்கிறீா்கள். ஒருபோதும் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பேன் என்று கூறவில்லை. ஆதரவு அளிக்க மாட்டேன்.
தில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றது குறித்து கேட்கிறீா்கள். நல்லது நடக்கும்.
தில்லியைப் போல பாஜகவை ஆம் ஆத்மி வீழ்த்தியதுபோல நாடு முழுவதும் பாஜக வீழ்த்தப்பட வேண்டும் என விரும்புகிறீா்களா எனக் கேட்கிறீா்கள்.
கண்டிப்பாக. தமிழகத்திலும் புதிய அரசியல் நிகழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றாா்.