• Home
  • அரசியல்
  • காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
அரசியல் இந்தியா செய்திகள்

காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 

கெல்லர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப்படை வீரர்கள் சோதனையில் ஈடுபட்டபோது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர் தாக்குதலில், தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். சோபியான் மாவட்டத்தில் ஒரு வாரத்திற்குள்ளாக நடத்தப்படும் 2வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

புல்வாமா தாக்குதலை அடுத்து, காஷ்மீர் பகுதியில் சற்று பதற்றம் அதிகரித்துவந்துள்ள நிலையில், இதுபோன்ற அடுத்தடுத்த தாக்குதல்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Comment