• Home
  • அரசியல்
  • அதிமுக தொண்டர்களின் முடிவால் கலக்கத்தில் கூட்டணி கட்சிகள்….
அரசியல் செய்திகள் தமிழ்நாடு

அதிமுக தொண்டர்களின் முடிவால் கலக்கத்தில் கூட்டணி கட்சிகள்….

அதிமுக போட்டியிடாத தொகுதிகளில், அக்கட்சி தொண்டர்களின் ஆதரவு நிலை தினகரனை நோக்கி திரும்புவதால் கூட்டணி வேட்பாளர்கள் அதிர்ச்சியில் இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன. அதிமுகவில் எஞ்சியிருக்கிற தொண்டர்களுக்கு பழனிசாமி, பன்னீர் செல்வம் மீது எந்த பிடிப்பும் இல்லை என்றாலும், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மீதான அபிமானத்தால் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற மனநிலையில் தான் அவர்கள் இருந்தார்கள்…

ஆனால் இப்போது வெறும் இருபது தொகுதிகளில் மட்டுமே அதிமுக போட்டியிடுவதால், கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்கப்பட்ட தொகுதிகளை சார்ந்த தொண்டர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம். அதிலும் இரட்டை இலை முதன்முதலில் போட்டியிட்ட திண்டுக்கல் தொகுதியை விட்டுக்கொடுத்ததை அதிமுகவினர் ரசிக்கவில்லை. எனவே இரட்டை இலை போட்டியிடாத இடங்களில், ஏதோ ஒரு கட்சி வேட்பாளருக்கு வாக்களிப்பதை விட, நேற்றுவரை நம்மமுடன் பயணித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளரை ஆதரிக்கலாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டார்களாம்.

இதோடு மட்டுமில்லாமல் வாரிசுகளுக்கு சீட் வழங்கியதையும், அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லையாம். இதனால் வாரிசுகள் போட்டியிடும் தொகுதிகளிலும் அதிமுக பின்னடைவை சந்திக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆட்சி முடிவுக்கு வந்தவுடன், அதிமுக ஒரே தலைமையின் கீழ் தான் பயணிக்க போகிறது. எனவே அமமுக வேட்பாளரை ஆதரிப்பது நம் கட்சியை ஆதரிப்பது போன்றது தான் என்கிற முடிவுக்கு அதிமுக தொண்டர்கள் வந்து விட்டார்களாம். இது தெரிந்த கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்களாம். இது தொடர்பான புகார்கள் பன்னீருக்கும், பழனிசாமிக்கும் வந்து கொண்டே இருக்கிறதாம்.

இந்த ஆட்சியை காப்பாற்ற 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வென்றாக வேண்டும் என்பதால் தான், நாடாளுமன்ற தொகுதிகளை வாரி வாரி கொடுத்தார்கள் பன்னீரும், பழனிசாமியும். இப்போது கூட்டணி கட்சி தொகுதிகளில் அதிமுகவினர், தினகரனுக்கு ஆதவாக தேர்தல் பணியாற்ற தொடங்கினால், 18 தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சி தொண்டர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்காமல் போனால் என்ன செய்வது என்கிற பயத்தில் அவர்கள் இருக்கிறார்களாம்…

இது மெகா கூட்டணி என சந்தோஷப்பட்ட அதிமுக கூட்டணியினர், இப்போது தொண்டர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் விரக்தியில் உள்ளளார்களாம்…

#AIADMK#AMMK#TTVDHINAKARAN#OPS

Leave a Comment