• Home
  • உலகம்
  • ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 16 வீரர்கள் பலி
உலகம் செய்திகள்

ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 16 வீரர்கள் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் அல்கொய்தா ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்களின் கொட்டத்தை ஒடுக்க ராணுவ வீரர்கள் போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் நாட்டின் மத்திய பகுதியில் மோப்டி பிராந்தியத்தில் உள்ள ராணுவ தளம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் அவர்கள் தாக்குதல் நடத்தினர்.

ராணுவ வீரர்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த மோதலில் ராணுவ வீரர்கள் 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.

அதே சமயம் பயங்கரவாதிகள் பலரும் பலியாகினர். ஆனால் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. அதேபோல் இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பு ஏற்கவில்லை.

Leave a Comment