• Home
  • தமிழ்நாடு
  • படம் தொடங்கி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவு; தோட்டா பாயுமா? பாயாதா?
சினிமா தமிழ்நாடு

படம் தொடங்கி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவு; தோட்டா பாயுமா? பாயாதா?

தனுஷ் மற்றும் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் முதல்முறையாக உருவாகிவரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தினை கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு முன்பு இதேநாளில் அதாவது மார்ச் 14, 2016 அன்று தான் தொடங்கியுள்ளனர். 

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ், ராணா, மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மும்பை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. 

இப்படத்தின் டீசர் டிசம்பர் 24, 2016ல் வெளியானது. நகைச்சுவை நடிகர் தர்புகா சிவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் சசிகுமார், சுனைனா மற்றும் ராணா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். ‘மறுவார்த்தை பேசாதே’ மற்றும் ‘விசிறி’ பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது. 

ஆனால் படம் ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை கிட்டத்தட்ட 3 வருடங்களாகிவிட்ட நிலையில், படம் மீதான எதிர்பார்ப்புகள் அத்தனையும் குறைந்து ரசிகர்கள் சலிப்படைந்து விட்டனர். இனி படம் வெளியாகாவிட்டாலும் பரவாயில்லை எனும் மனநிலைக்கு வந்துள்ளனர். இந்நிலையில் படத்தயாரிப்பாளர் மதன், “படத்தின் ட்ரெய்லர் முடிந்து விட்டது. எல்லாம் சரியெனில் படம் ஏப்ரலில் வெளியாகும்” என கடந்த மார்ச் 6ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

சொன்னபடி படம் வெளியாகுமா? என்பதை ரசிகர்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment