• Home
  • தமிழ்நாடு
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சி மேற்கொள்வதை பார்க்க திரண்ட கூட்டம் : களைகட்டிய மைதானம்!
தமிழ்நாடு விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சி மேற்கொள்வதை பார்க்க திரண்ட கூட்டம் : களைகட்டிய மைதானம்!

வரும் மார்ச் 23 ஆம் தேதி நடைபெறும் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சி மேற்கொள்வதைப் பார்க்க மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் கூடினர்.

ஐபிஎல் தொடரின் 12 வது சீசன் வரும் மார்ச் 23 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தாண்டு முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சனிக்கிழமை தனது பயிற்சியை சனிக்கிழமை தொடங்கியது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கி்ங்கஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் ”தல பராக்”,“விசில் போடு” என்று பதிவிட்டு பயிற்சி மேற்கொள்வதற்காக மைதானத்திற்குள் வந்த தோனியை பார்த்து ரசிகா்கள் ஆர்பரித்து தோனி தோனி கூச்சலிட்டு என்று விண்ணை பிளக்கும் அளவி்ற்கு விசில் சத்தம் பறக்க வைக்கின்றனர்.

Leave a Comment