• Home
  • அரசியல்
  • அதிமுக வேட்பாளர்கள் இன்று நண்பகல் ஒரே நேரத்தில் மனுத்தாக்கல்!
அரசியல் செய்திகள் தமிழ்நாடு

அதிமுக வேட்பாளர்கள் இன்று நண்பகல் ஒரே நேரத்தில் மனுத்தாக்கல்!

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று மனுத் தாக்கல் செய்கின்றனர். 

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் நாளுக்கு நாள் தேர்தல் தேர்தல் ஜூரம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் எதிரெதிர் துருவங்களான அதிமுக – திமுக ஆகிய இரு கட்சிகளும், வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டதை தொடர்ந்து, தற்போது வேட்புமனுத் தாக்கலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் இன்று நண்பகல் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர். 

இதனிடையே, தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக களமிறங்கியுள்ள திமுக, வரும் 25ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களும் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளனர். திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார். ஈரோடு தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர், தனி சின்னத்தில் போட்டியிடுவார் எனவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கை இன்று மதியம் ஒரு மணிக்கு வெளியாகிறது. சென்னை அசோக் நகர் அலுவலகத்தில், கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். இதனிடையே தமிழகத்தில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a Comment